தமிழகத்தில் 24 மணிநேரம் கடைகள் வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும் அரசாணை அவமதிப்பு : கோவையில் கடைகள் திறக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவிப்பதாக வியாபாரிகள் புகார்

கோவை: தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிட்டும், கோவையில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை: தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிட்டும், கோவையில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மத்திய அரசின் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா கடந்த 2016-ஆம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் வர்த்தக நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 



இதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான காந்திபுரம், ரயில் நிலையம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் கடைகள் 24 மணி நேரம் திறக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என கோவை மாநகர வியாபாரிகள் சம்மேளனத்தினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும், கடைகள் அரசாணை படி திறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தநிலையில், இந்த கோரிக்கையை ஏற்ற மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு வியாபாரிகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...