திருப்பூர் : திருப்பூரில் தகாத உறவு காரணமாக பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் தகாத உறவு காரணமாக பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் பெரிய பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் பல்கீஸ் பேகம். இவரது கணவர் இப்ராகிம் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி காலை பல்கிஸ் பேகம், அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார், திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த அபுதாகீர் என்பவரை கைது செய்தனர். இவர், திருப்பூர் கோம்பைத் தோட்டம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்த போது, அவருக்கும் பல்கீஸ் பேகத்திற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் பழகி வந்த நிலையில், பல்கீஸ் பேகம் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துள்ளதை அறிந்த அபுதாகீர் அவரை எச்சரித்துள்ளார். இதனை ஏற்க மறுத்து அபுதாகீருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அபுதாகீர் பல்கீஸ் பேகத்தை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, தனிப்படை அமைத்த திருப்பூர் தெற்கு போலீசார் திண்டுக்கல் சென்று அபுதாகீரை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.
திருப்பூர் பெரிய பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் பல்கீஸ் பேகம். இவரது கணவர் இப்ராகிம் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி காலை பல்கிஸ் பேகம், அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார், திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த அபுதாகீர் என்பவரை கைது செய்தனர். இவர், திருப்பூர் கோம்பைத் தோட்டம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்த போது, அவருக்கும் பல்கீஸ் பேகத்திற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் பழகி வந்த நிலையில், பல்கீஸ் பேகம் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துள்ளதை அறிந்த அபுதாகீர் அவரை எச்சரித்துள்ளார். இதனை ஏற்க மறுத்து அபுதாகீருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அபுதாகீர் பல்கீஸ் பேகத்தை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, தனிப்படை அமைத்த திருப்பூர் தெற்கு போலீசார் திண்டுக்கல் சென்று அபுதாகீரை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.