நீலகிரி : குன்னூர் அருகே உள்ள கரோலினா பெரியார் நகர் பகுதியில் நாவல் பழம் சாப்பிடுவதற்காக கூட்டமாக வந்த கரடிகளை வனத்துறையினர் தீப்பாந்தம் மூட்டி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
நீலகிரி : குன்னூர் அருகே உள்ள கரோலினா பெரியார் நகர் பகுதியில் நாவல் பழம் சாப்பிடுவதற்காக கூட்டமாக வந்த கரடிகளை வனத்துறையினர் தீப்பாந்தம் மூட்டி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கரோலினா எஸ்டேட். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தோட்டத்தில் நாவல் பழங்களை சாப்பிட மாலை நேரத்தில் வந்த கரடி கூட்டம், தொடர்ந்து இரவு வரை இப்பகுதியில் உள்ள பாலடைந்த வீட்டினுள் பதுங்கிக் கொண்டன. இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னூர் வனத்துறையினர், இரவில் தீப்பந்தங்களுடன் சென்று கரடி கூட்டத்தை 6 மணிநேரத்திற்குப் பின் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர். இதன் காரணமாக, தோட்ட தொழிலாளர்கள் ஊர்மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இப்பகுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் இந்த கரடி கூட்டத்தை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் துரத்த வேண்டுமென்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கரோலினா எஸ்டேட். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தோட்டத்தில் நாவல் பழங்களை சாப்பிட மாலை நேரத்தில் வந்த கரடி கூட்டம், தொடர்ந்து இரவு வரை இப்பகுதியில் உள்ள பாலடைந்த வீட்டினுள் பதுங்கிக் கொண்டன. இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னூர் வனத்துறையினர், இரவில் தீப்பந்தங்களுடன் சென்று கரடி கூட்டத்தை 6 மணிநேரத்திற்குப் பின் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர். இதன் காரணமாக, தோட்ட தொழிலாளர்கள் ஊர்மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இப்பகுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் இந்த கரடி கூட்டத்தை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் துரத்த வேண்டுமென்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.