திருப்பூர் : திருப்பூரில் கொடுத்த பணத்தை திருப்பி தராத்தால், மனமுடைந்த ஓட்டல் உரிமையாளரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்களை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூரில் கொடுத்த பணத்தை திருப்பி தராத்தால், மனமுடைந்த ஓட்டல் உரிமையாளரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்களை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வாலிபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவபிரகாஷ் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்யா தேவி. இவர்களுக்கு மதுவர்ஷா, ஹரினி என 7 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே, தேவபிரகாஷின் சித்தி செல்வி மற்றும் சித்தப்பா சுரேஷ் இருவரும், தேவபிரகாஷிடம் தொழில் செய்வதற்க்காக ரூ. 9 லட்சம் வாங்கிய நிலையில், பல மாதங்களாக பணத்தை திருப்பி தராமால் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 9 லட்சம் பணத்திற்கான வட்டியை தேவபிரகாஷ் கட்டி வந்த நிலையில், தனது சித்தி மற்றும் சித்தப்பாவிடம் நேற்று முன் தினம் பணத்தை எப்போது தருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது, முறையாக பதில் அளிக்காமல் அலட்சியத்தோடு பதில் அளித்ததால், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேவபிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே, தேவபிரகாஷ் தனது இறப்பிற்கு காரணம் (சித்தி செல்வி மற்றும் சித்தப்பா சுரேஷ் ) என கைப்பட கடிதமும் எழுதி வைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தேவபிரகாஷின் உறவினர்கள், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, தேவபிரகாஷின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே தேவபிரகாஷின் உடலை வாங்க உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வாலிபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவபிரகாஷ் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்யா தேவி. இவர்களுக்கு மதுவர்ஷா, ஹரினி என 7 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே, தேவபிரகாஷின் சித்தி செல்வி மற்றும் சித்தப்பா சுரேஷ் இருவரும், தேவபிரகாஷிடம் தொழில் செய்வதற்க்காக ரூ. 9 லட்சம் வாங்கிய நிலையில், பல மாதங்களாக பணத்தை திருப்பி தராமால் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 9 லட்சம் பணத்திற்கான வட்டியை தேவபிரகாஷ் கட்டி வந்த நிலையில், தனது சித்தி மற்றும் சித்தப்பாவிடம் நேற்று முன் தினம் பணத்தை எப்போது தருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது, முறையாக பதில் அளிக்காமல் அலட்சியத்தோடு பதில் அளித்ததால், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேவபிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே, தேவபிரகாஷ் தனது இறப்பிற்கு காரணம் (சித்தி செல்வி மற்றும் சித்தப்பா சுரேஷ் ) என கைப்பட கடிதமும் எழுதி வைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தேவபிரகாஷின் உறவினர்கள், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, தேவபிரகாஷின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே தேவபிரகாஷின் உடலை வாங்க உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.