திருப்பூரில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு : கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்

திருப்பூர் : திருப்பூர் அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ஆர். தினேஷ் குமார். தந்தையை இழந்த இவர், தனது தாயாருடன் வசித்து வந்தார். இருவரும் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்றைய தினம் வேலைக்கு சென்ற தாயார் வந்து பார்த்த போது, காயங்களுடன் தினேஷ்குமார் படுத்து கிடந்தார். அவரது வாயில் சாணிப்பவுடர் குடித்த அடையாளங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட தினேஷ்குமார் நள்ளிரவு சிகிச்சையின் போது உயிரிழந்தார். 



இந்த நிலையில், தினேஷ் சாணிப்பவுடர் குடித்து உயிரிழக்கவில்லை எனவும், தினேஷ் அதே பகுதியை சேர்ந்த வேறு சமுதாய பெண்ணை காதலித்ததாகவும், நேற்றையதினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தினேஷ் குமார் வீட்டில் தங்கியிருந்தபோது, பெண் வீட்டார் 10-க்கும் மேற்பட்டோர் தினேசை தாக்கியதாலே அவர் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



மேலும், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்ய வேண்டும் எனவும், தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக்கூறி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கி சென்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...