கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் காதல் ஜோடிகளை ஆணவ கொலை செய்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் காதல் ஜோடிகளை ஆணவ கொலை செய்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ரங்கராயன் ஓடையைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் கனகராஜும், அதே பகுதியில் உள்ள தர்ஷினி பிரியாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதில், கனகராஜன் காதலுக்கு அவரது சகோதரர் வினோத் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி காதல் ஜோடிகள் இருவரையும் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிபாளையம் பகுதியில் அரிவாளால் வினோத் சரமாரியாக தாக்கினார். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, வர்ஷினி பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக வினோத்தை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, குற்றத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், இன்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், வினோத்திற்கு 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ரங்கராயன் ஓடையைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் கனகராஜும், அதே பகுதியில் உள்ள தர்ஷினி பிரியாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதில், கனகராஜன் காதலுக்கு அவரது சகோதரர் வினோத் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி காதல் ஜோடிகள் இருவரையும் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிபாளையம் பகுதியில் அரிவாளால் வினோத் சரமாரியாக தாக்கினார். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, வர்ஷினி பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக வினோத்தை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, குற்றத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், இன்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், வினோத்திற்கு 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.