கோவை மாநகராட்சியில் ரூ. 94.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

கோவை : கோவை மாநகராட்சியில் 90 மற்றும் 91 ஆகிய வார்டுகளில் ரூ. 94 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கோவை : கோவை மாநகராட்சியில் 90 மற்றும் 91 ஆகிய வார்டுகளில் ரூ. 94 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 91-வது வார்டு சுகுணாபுரம் மேற்கு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 40.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், 90-வது வார்டு கோவைப்புதூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக்கடை கட்டிடத்தையும் திறந்து வைத்தார். 

இதேபோல, 90-வது வார்டு கோவைப்புதூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவுக் கூடத்தையும், 91-வது வார்டு குளத்துப்பாளையம் அம்மாசை கவுண்டர் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 36 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் ஆக மொத்தம் ரூ. 94 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்களின்; பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 



இந்த நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச. பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர். ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...