கோவை : பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்குட்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் பெய்த கனமழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
கோவை : பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்குட்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் பெய்த கனமழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
தமிழகம் முழுவதும் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், மழை வேண்டி ஆளும் அ.தி.மு.க.வின் சார்பில் மாவட்ட வாரியாக கோவில்கள் யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் மழையினை பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில் எந்தவித தாக்கத்தையும் இந்த மழை ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
தமிழகம் முழுவதும் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், மழை வேண்டி ஆளும் அ.தி.மு.க.வின் சார்பில் மாவட்ட வாரியாக கோவில்கள் யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் மழையினை பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில் எந்தவித தாக்கத்தையும் இந்த மழை ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.