சின்ன தடாகம் பகுதியில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

கோவை : சின்ன தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை : சின்ன தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது :- சின்ன தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40.000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கனிமவள கொள்ளையால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



இது குறித்து ராஜேந்திரன் கூறியதாவது:- சின்ன தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பகுதிகள் விவசாய நிலங்களாகும். பெரும்பாலானோர் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு செங்கல் சூளை அமைத்து, தினமும் 4,000 லோடு செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளவர்கள் 50 முதல் 60 அடி ஆழம் தோண்டி மண் எடுக்கின்றனர். மேலும், மண் அள்ள ரோபோக்களை உபயோகிக்கின்றனர். தற்போது, கிராவல் மண் மற்றும் மணல் அள்ளப்படுகிறது. இவ்வாறு கனிம வள கொள்ளையில் ஈடுபடும் செங்கல் சூளை உரிமையாளர்கள், இயற்கை வளத்தை அழித்து கோடி கணக்கில் சம்பாதித்துள்ளனர். 

மேலும், பச்சை செங்கலை வேக வைக்கும் போது வெளிவரும் புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதால் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கனிமவள கொள்ளை தொடர்பாக மனு அளித்தாலும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மாவட்ட ஆட்சியர் நேரிடையாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...