கோவை : ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் நன்கு பயனடைந்து வருவதாக கோவையில் ஜி.எஸ்.டி. ஆணையர் ஜி. ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.
கோவை : ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் நன்கு பயனடைந்து வருவதாக கோவையில் ஜி.எஸ்.டி. ஆணையர் ஜி. ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று ஜி.எஸ்.டி. தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை ஜி.எஸ்.டி. பவனிலும் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜி.எஸ்.டி. ஆணையர் ஜி. ஸ்ரீனிவாச ராவ் பேசியதாவது :- நாட்டின் நிதித்துறையில் ஜி.எஸ்.டி. சிறப்பான சீர்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட விலை குறைவினால் வாடிக்கையாளர்கள் நன்கு பயனடைந்துள்ளனர். கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் 2019 மார்ச் 31 வரையிலான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 4,610 கோடியாகும். இது கடந்த நிதியாண்டை விட பல மடங்கு கூடுதலானதாகும். கடந்த நிதியாண்டில் ரூ. 2.911 வருவாயாகும்.
அதேபோல, 2019-20 நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 26% ஜி.எஸ்.டி. வருவாய் பெறப்பட்டுள்ளது. இது கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதே அளவு வருவாய் கிட்டியது.
மேலும், 2017-18?ம் ஆண்டு நிதியாண்டில் ரூ. 478 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டில் ரூ. 529 கோடி அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 1.153 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும், ரூ. 152 கோடி செலுத்தப்பட்டுள்ளது. கோவையில் வரி ஏய்ப்பு செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரூ. 40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை மாத இறுதி வரை வரி ஏய்ப்பு செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், எனக் கூறினார்.
நாடு முழுவதும் நேற்று ஜி.எஸ்.டி. தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை ஜி.எஸ்.டி. பவனிலும் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜி.எஸ்.டி. ஆணையர் ஜி. ஸ்ரீனிவாச ராவ் பேசியதாவது :- நாட்டின் நிதித்துறையில் ஜி.எஸ்.டி. சிறப்பான சீர்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட விலை குறைவினால் வாடிக்கையாளர்கள் நன்கு பயனடைந்துள்ளனர். கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் 2019 மார்ச் 31 வரையிலான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 4,610 கோடியாகும். இது கடந்த நிதியாண்டை விட பல மடங்கு கூடுதலானதாகும். கடந்த நிதியாண்டில் ரூ. 2.911 வருவாயாகும்.
அதேபோல, 2019-20 நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 26% ஜி.எஸ்.டி. வருவாய் பெறப்பட்டுள்ளது. இது கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதே அளவு வருவாய் கிட்டியது.
மேலும், 2017-18?ம் ஆண்டு நிதியாண்டில் ரூ. 478 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டில் ரூ. 529 கோடி அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 1.153 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும், ரூ. 152 கோடி செலுத்தப்பட்டுள்ளது. கோவையில் வரி ஏய்ப்பு செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரூ. 40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை மாத இறுதி வரை வரி ஏய்ப்பு செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், எனக் கூறினார்.