குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை : குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். இதில், மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் சி. சிவசாமி, மாவட்ட பொருளாளர் யூ.கே. சுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் ஆர். ஏ. கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் சி. தங்கவேல், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மு.வ. கல்யாணசுந்தரம், ஆர். சுதர்சன், நிர்மலா மருதகுட்டி மற்றும் ரவீந்திரன், வி.ஆ. பாண்டியன், அறிவொளி, ஆறுச்சாமி, சு.பழனிசாமி, அமிர்தம், கலா, நந்தினி, ராபர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசே குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கு, தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடு, கோவை மாநகராட்சி நிர்வாகமே குடிநீர் விநியோக உரிமையை அந்நிய நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்காதே உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டது.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...