கோவை : துடியலூர் அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை எனவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : துடியலூர் அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை எனவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துடியலூர் பகுதியில் தமிழ்நாடு அரசு ஐ.டி.ஐ. நிறுவனமானது செயல்பட்டு வருகின்றது. இந்த ஐ.டி.ஐ. நிறுவனத்தில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், இது குறித்து பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் உள்பட பல்வேறு சலுகைகளும் மறுக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் சமரசப்படுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து, அதிகாரிகளிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.

துடியலூர் பகுதியில் தமிழ்நாடு அரசு ஐ.டி.ஐ. நிறுவனமானது செயல்பட்டு வருகின்றது. இந்த ஐ.டி.ஐ. நிறுவனத்தில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், இது குறித்து பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் உள்பட பல்வேறு சலுகைகளும் மறுக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் சமரசப்படுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து, அதிகாரிகளிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.