கிரண்பேடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப தி.மு.க. முடிவு : கோவையில் புதுவை முதலமைச்சர் பேட்டி

கோவை : புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன்னிடம் தெரிவித்ததாகவும், தமிழகம் குறித்து கிரண்பேடி பேசி இருப்பதற்கு புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.


கோவை : புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன்னிடம் தெரிவித்ததாகவும், தமிழகம் குறித்து கிரண்பேடி பேசி இருப்பதற்கு புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது, அவர் பேசியதாவது :- துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தமிழக தலைவர்கள், பொதுமக்களை பற்றி தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், தமிழக தலைவர்கள் ஊழல் பேர்வழிகள் என்றும், ஊழலில் மக்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்றும், தண்ணீர் பிரச்சினை குறித்து சொல்லும் போது தெரிவித்துள்ளார். தண்ணீர் பஞ்சம் தமிழகத்தில் மட்டுமல்ல மகாராஷ்டிரா, உத்திரபிரதேம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் இருக்கின்றது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் ஏரியை தூர்வார வந்த போது அனைவரும் உதவினோம்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட மழை பொய்த்து போனதும், கிருஷ்ணா நதிநீர் வராததும் காரணம். தமிழக அரசியல்வாதிகளை எந்தவித ஆதாரமில்லாமல் பேசுவதும், மக்களை தவறாக பேசுவதும் என துணைநிலை ஆளுநர் இறங்கி இருக்கின்றார். புதுச்சேரி ஆளுநருக்கு தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி பேச அருகதை கிடையாது. கிரண்பேடி தேவையில்லாமல் மற்ற மாநில விவகாரங்களில் தலையிட்டு கெட்ட பெயரை தானே சம்பாதித்துக் கொள்கிறார். இது கண்டனத்திற்குரியது. 

தி.மு.க. தலைவர் இந்த பிரச்சினையை தமிழக சட்டமன்றத்தில் எழுப்பிய போது, சபாநாயகர் அதை துரதிஷ்டவசமாக அவை குறிப்பில் இருந்து நீக்கியிருக்கின்றார். இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வியாதி ஒன்று உள்ளது. அது விளம்பரத்துக்காகப் பேசி வருவது. துணைநிலை ஆளுநருக்கு தகுதியில்லாதவர் கிரண்பேடி. மத்திய அரசு புதுவையில் காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று கிரண்பேடியை அனுப்பி வைத்துள்ளது. கிரண்பேடியின் செயல்கள் தரம் தாழ்ந்து போய்விட்டது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் எழுப்ப இருக்கின்றன. தமிழகத்திற்கும், கிரண்பேடிக்கும் சம்பந்தம் இல்லை, என தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...