கோவையில் போலி ஆவணம் தயாரித்து மின் இணைப்பு பெற்ற விவகாரத்தில் தொழிலதிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு

கோவை : செட்டிபாளையம் அருகே மின் இணைப்பிற்கு போலியான ஆவணங்கள் கொடுத்த விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் மீது 4 பிரிவுகளின் கீழ் செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை : செட்டிபாளையம் அருகே மின் இணைப்பிற்கு போலியான ஆவணங்கள் கொடுத்த விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் மீது 4 பிரிவுகளின் கீழ் செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

செட்டிபாளையம் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் கிரசர் யூனிட் அமைப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற கடந்த ஆண்டு ஜனவரியில் விண்ணப்பித்திருந்தார். இதில், பெறப்பட்ட மாசு கட்டுப்பாட்டு தரச்சான்றிதழை மாற்றி போலியான ஆவணங்களை தயார் செய்து மின் வாரியத்தில் கொடுத்து மின் இணைப்பை பெற்றதாக தெரிகிறது. 

இந்த நிலையில், சமூக ஆர்வலர் ஒருவரின் முயற்சியால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில், ஜெயக்குமார் போலியான ஆவணங்களை கொடுத்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமாறன் கொடுத்த புகார் அடிப்படையில், செட்டிபாளையம் போலீசார் போலியான ஆவணங்களை தயாரித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...