தனியார் நிறுவனத்தில் வெளியேறும் சாம்பலால் சுகாதார சீர்கேடு : பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சாம்பலால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

திருப்பூர் : திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சாம்பலால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் கல்லூரி சாலை ஆவாரங்காடு தோட்டம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்புக்கு அருகே செயல்பட்டு வரும் தனியார் காம்பாக்டிங்க் நிறுவனம் தங்களது பாய்லர்களை சரியாக பராமரிக்காததால், கடந்த சில நாட்களாக பாய்லரில் இருந்து வெளியேறும் சாம்பல்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் விழுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், தங்கள் குடியிருப்பு பகுதி முழுவதுமே மாசடைவதோடு, சமைக்கும் உணவுகளிலும் தண்ணீர்களிலும் விழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகக் கூறும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...