பொள்ளாச்சியில் வரும் 4-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு

கோவை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு பொள்ளாச்சியில் வரும் 4-ம் தேதி நடக்கிறது.

கோவை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு பொள்ளாச்சியில் வரும் 4-ம் தேதி நடக்கிறது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலம்‌ டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணிக்காலியிடத்‌ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம்‌ மூலம்‌ இத்தேர்விற்கு கடந்த மாதம் 14-ம் தேதி முதல்‌ விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது‌. இத்தேர்விற்கு இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்க வரும் ஜுலை 14-ம் தேதி கடைசி நாளாகும் குரூப் 4 தேர்வு வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடக்கிறது. 

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்‌ மனுதாரர்கள்‌ தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்‌ மூலம்‌ சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு வரும் 4-ம் தேதி முதல்‌ பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில்‌ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில்‌, பாடக்குறிப்புகள்‌ வழங்கப்படுவதுடன்‌ குழு விவாதம்‌, பாடவாரியாக வகுப்புகள்‌ மற்றும்‌ மாதிரித்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட்டு தேர்வில்‌ தேர்ச்சிபெற அனைத்து வழிவகைகளும்‌ செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கும்‌ சிறப்பு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. ஆகவே போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவோர்‌ இவ்வாய்ப்பினைப்‌ பயன்படுத்தி இத்தேர்விற்கு விண்ணப்பித்து பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்‌ கல்லூரியில்‌ நடைபெறவுள்ள இலவச பயிற்சி வகுப்புகளில்‌ கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்‌ மனுதாரர்கள்‌, விண்ணப்பித்தற்கான ஆதாரம்‌ மற்றும்‌ புகைப்படத்துடன்‌ விவரங்களை பொள்ளாச்சி சார்‌ ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ 3-ம் தேதி மாலைக்குள்‌ சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்‌. மேலும்‌, விவரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணில்‌ (0422-2642388) தொடர்பு கொள்ளலாம்‌, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...