கோவையில் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி மனு

கோவை : சரவணம்பட்டி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பதிற்கு உடனடி நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை : சரவணம்பட்டி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பதிற்கு உடனடி நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

கோவையை அடுத்துள்ள கோவில்பாளையம் கோவில்மேடு பகுதியில் பன்றி கடை நடத்தி வரும் நாகராஜ் அழைத்ததின் பேரில், அவரது தந்தை சுப்ரமணிக்கு சொந்தமான பன்றி பண்ணையை சுத்தம் செய்வதற்காக தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த ராஜப்பன், வேடியப்பன் மற்றும் மற்றொருவரான வேடியப்பன் ஆகியோர் கடந்த 26-ம் தேதி சென்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் இன்று பணியில் ஈடுபட்ட இவர்கள், செப்டிக் டேங்கில் இருந்த விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக, கையால் மலம் அள்ளும் தடை சட்டம் மற்றும் மறுவாழ்வு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.



இந்த நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம், திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆறுச்சாமி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து யு.கே. சிவஞானம் கூறுகையில், "விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பம், இவர்களது வருமானத்தை நம்பியே இருந்தது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு கையால் மலம் அள்ளும் தடை சட்டம் மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் படியும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியும் இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என தெரிவித்தார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...