தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட பட்டா இடத்தை மீட்டுத் தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் குடிபுகுந்து பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா

திருப்பூர் : திருப்பூரில் பட்டா வழங்கிய இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வீடுகட்ட விடாமல் இடையூறு செய்வதாக் கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடி புகுந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் பட்டா வழங்கிய இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வீடுகட்ட விடாமல் இடையூறு செய்வதாக் கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடி புகுந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சிக்குட்பட்ட நிழலி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய பட்டாவிற்கான இடத்தை அளந்து வழங்காததால், தற்போது அவ்விடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து இருப்பதோடு, அங்கு குடிசை அமைக்க விடாமல் அவர்கள் தடுத்து வருவதாக நிழலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். 



இந்த நிலையில், தங்கள் பட்டாவிற்கான நிலத்தை மாவட்ட நிர்வாகம் அளந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாத்திரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். இதனையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்ததை அடுத்து, தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...