கோவை : கோவை விமான நிலையத்திற்கு சர்வதேச வான்வழி போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நீலகிரி எம்.பி. ஆ. ராசாவுக்கு கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.
கோவை : கோவை விமான நிலையத்திற்கு சர்வதேச வான்வழி போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நீலகிரி எம்.பி. ஆ. ராசாவுக்கு கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.
கோவை விமான நிலையத்திற்கு சர்வதேச விமான சேவைகள் வழங்கப்படாமல் புறக்கணிப்பதாகவும், விமான சேவை கோரி அளிக்கப்பட்ட அறிக்கைகள் நிலுவையில் போடப்பட்டுள்ளதாகவும் அண்மையில் மக்களவையில் நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசினார். மேலும், டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியை எம்.பி. ஆ. ராசா நேரில் சந்தித்து கோவை விமான போக்குவரத்து விரிவாக்கம் குறித்து மனு ஒன்றையும் கடந்த வாரம் அளித்தார்.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து துபாய், கோலாலம்பூர் மற்றும் பேங்காக் ஆகிய நகரங்களுடனான சர்வதேச சேவைக்காக மக்களவையில் குரல் கொடுத்த நீலகிரி எம்.பி. ஆ. ராசாவை நேரில் சந்தித்து கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, கோவை விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் விமான சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல எம்.பி.க்களை நேரில் சந்தித்து ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறும் அவர்கள் அப்போது ஆ. ராசாவிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.