நீலகிரி : நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் 24 மணி நேரமும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் புதிதாகப் பொறுப்பேற்ற கலைச்செல்வன் தெரிவித்தார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் 24 மணி நேரமும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் புதிதாகப் பொறுப்பேற்ற கலைச்செல்வன் தெரிவித்தார்.
தமிழகமெங்கும் கடந்த வாரம் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஒரு சில இடங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், ஒரு சிலர் பதவி உயர்வு பெற்றனர். இதில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சண்முகப் பிரியா சென்னை குற்றப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னையில் கூடுதல் ஆணையராக இருந்த கலைச்செல்வன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இந்த மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு அதிகப்படுத்தப்படும்," என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகமெங்கும் கடந்த வாரம் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஒரு சில இடங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், ஒரு சிலர் பதவி உயர்வு பெற்றனர். இதில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சண்முகப் பிரியா சென்னை குற்றப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னையில் கூடுதல் ஆணையராக இருந்த கலைச்செல்வன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இந்த மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு அதிகப்படுத்தப்படும்," என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.