நகர வாரியாக கோவை உள்பட ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான சி.இ.ஓ.க்களை நியமிக்க அரசு முடிவு..?

கோவை : கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோவை : கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னையைத் தவிர பெரும்பாலான நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் அந்தந்த மாநகராட்சி ஆணையரின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளைக் கையாளுவதில் மாநகராட்சி ஆணையர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு தலைமை நிர்வாக அலுவலரை நகரம் வாரியம் நியமிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. 

கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி கோவை ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அலுவலராக முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் ஆர். சுகன்யா நியமிக்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் 3 ஆண்டு பணி அனுபவத்துடன், ஆளுமையில் எந்தவித முன்அனுபவமும் இல்லாதவரை நியமனம் செய்ததாகக் கூறி எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அதே மாதத்தில் 28-ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்த சூழலில், கோவை உள்பட பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான சி.இ.ஓ.க்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் நலன் சார்ந்த திட்டம் என்பதால், அரசுக்கு ஆதரவான நபர்களை நியமிக்காமல், அந்தந்தப் பகுதி மக்களிடம் ஆலோசனை செய்து தகுதியானவரை நியமிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டி நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் ஸ்பெஷல் பர்ப்போஸ் வைக்கிள்ஸ்க்கென ஒரு சி.இ.ஓ.வை வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தின் ஒப்புதலின் பேரில் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் சி.இ.ஓ.வின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...