உதகையில் பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பாடகி பி. சுசிலா

நீலகிரி : உதகையில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பாட்டு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி. சுசிலா கேடயங்களை வழங்கி கெளரவித்தார்.

நீலகிரி : உதகையில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பாட்டு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி. சுசிலா கேடயங்களை வழங்கி கெளரவித்தார்.



நீலகிரி மாவட்டம் உதகையில் கோவையைச் சேர்ந்த தனியார் இசை கல்லூரி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே பாட்டு போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி. சுசிலா கலந்து கொண்டு, மேடை பாடல் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்த அவர், பாடகர்களையும், இசை கலைஞர்களையும் வெகுவாக பாராட்டியதுடன் அவர்களுடன் இணைந்து தான் பாடிய பாடல்களை பாடி மகிழ்ந்தார். பின் தற்போது உள்ள இளைய தலைமுறையினர் பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்குவதாக பாராட்டினார்.



பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...