திருப்பூர் : தினுசு தினுசாக திருடும் சதுரங்க வேட்டை பட பாணியில், கருப்பு தாள்களை தண்ணீரில் நனைத்தால் 2,000 ரூபாய் நோட்டாக மாறும் என நூதன மோசடியில் ஈடுபட்ட மூவரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : தினுசு தினுசாக திருடும் சதுரங்க வேட்டை பட பாணியில், கருப்பு தாள்களை தண்ணீரில் நனைத்தால் 2,000 ரூபாய் நோட்டாக மாறும் என நூதன மோசடியில் ஈடுபட்ட மூவரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.
‘ஒருத்தர் கிட்ட பரிதாபத்தை எதிர்பார்த்தா நம்மளால ஜெயிக்க முடியாது, அவங்க ஆசையை தூண்டி விட்டா எவ்வளவு பணம் வேணும்னாலும் சம்பாதிக்கலாம்’ என புது பாணிகளில் திருடும் முறைகளை வெளிச்சம் போட்டு காட்டிய படம் சதுரங்க வேட்டை. அந்த பட பாணியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கருப்பு தாள்களை தண்ணீரில் வைத்தால் 2,000 ரூபாயாக மாறும், ஆயிரம் ரூபாய்க்கு 3,000 ரூபாய் என ஒரு நூதன மோசடி நடைபெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பல மாதங்களாக பணத்தை மும்மடங்காக மாற்றி தருவதாகவும், கருப்பு தாளை 2,000 ரூபாய் நோட்டாக மாற்றி தருவதாகவும் பண மோசடி நடை பெற்று வந்துள்ளது. அசல் 2,000 ரூபாய் நோட்டில் கருப்பு கெமிக்கல் பவுடர் தடவி அதனை கருப்பு பேப்பர் என காண்பித்து, பின்னர் அதில் ரசாயனம் தடவுவதை போல ஏமாற்றி, அதை தண்ணீரில் கழுவிய உடன் பணமாக மாற்றிக் காட்டியுள்ளனர். இதுப்போல, பல பேரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு முன்று லட்சம் தருவதாகக் கூறி பணமோசடி செய்து வந்துள்ளனர். பணம் பெற்ற பிறகு இந்த மோசடி கும்பல் பணத்தை தராமல் இழுத்தடித்ததால், இவர்கள் மீது சந்தேகமடைந்த நபர்கள் தி.மு.க. நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர்.
கருப்புத்தாள்களை ரசாயனம் தடவி பணமாக மாற்றுவது ஏமாற்று வேலை என்பதால், இந்த கும்பலை பிடிப்பதற்கு திட்டமிட்ட தி.மு.க.வினர் பணம் மாற்ற வேண்டும் என நடித்து அவர்களை வரவழைத்து தொடர் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களை விசாரித்ததில் தர்மபுரி மாவட்டம் கொங்கரைப் பட்டியைச் சேர்ந்த கோபி, வாணியம்பாடி சேனப்பட் என்ற பகுதியைச் சேர்ந்த ஷாஜகான், வேலூர் மாவட்டம் முல்லை நகரைச் சேர்ந்த தசையன் என்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் மூவரும் தொடர்ந்து தாராபுரம் பகுதிகளில் பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து, தாராபுரம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி. செந்தில் குமார் அளித்த புகாரின் பேரில், மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கருப்பு தாள்கள், ரசாயனம் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் எத்தனை பேரை ஏமாற்றி பணம் பறித்தனர் என்பது குறித்தும், தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘ஒருத்தர் கிட்ட பரிதாபத்தை எதிர்பார்த்தா நம்மளால ஜெயிக்க முடியாது, அவங்க ஆசையை தூண்டி விட்டா எவ்வளவு பணம் வேணும்னாலும் சம்பாதிக்கலாம்’ என புது பாணிகளில் திருடும் முறைகளை வெளிச்சம் போட்டு காட்டிய படம் சதுரங்க வேட்டை. அந்த பட பாணியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கருப்பு தாள்களை தண்ணீரில் வைத்தால் 2,000 ரூபாயாக மாறும், ஆயிரம் ரூபாய்க்கு 3,000 ரூபாய் என ஒரு நூதன மோசடி நடைபெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பல மாதங்களாக பணத்தை மும்மடங்காக மாற்றி தருவதாகவும், கருப்பு தாளை 2,000 ரூபாய் நோட்டாக மாற்றி தருவதாகவும் பண மோசடி நடை பெற்று வந்துள்ளது. அசல் 2,000 ரூபாய் நோட்டில் கருப்பு கெமிக்கல் பவுடர் தடவி அதனை கருப்பு பேப்பர் என காண்பித்து, பின்னர் அதில் ரசாயனம் தடவுவதை போல ஏமாற்றி, அதை தண்ணீரில் கழுவிய உடன் பணமாக மாற்றிக் காட்டியுள்ளனர். இதுப்போல, பல பேரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு முன்று லட்சம் தருவதாகக் கூறி பணமோசடி செய்து வந்துள்ளனர். பணம் பெற்ற பிறகு இந்த மோசடி கும்பல் பணத்தை தராமல் இழுத்தடித்ததால், இவர்கள் மீது சந்தேகமடைந்த நபர்கள் தி.மு.க. நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர்.
கருப்புத்தாள்களை ரசாயனம் தடவி பணமாக மாற்றுவது ஏமாற்று வேலை என்பதால், இந்த கும்பலை பிடிப்பதற்கு திட்டமிட்ட தி.மு.க.வினர் பணம் மாற்ற வேண்டும் என நடித்து அவர்களை வரவழைத்து தொடர் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களை விசாரித்ததில் தர்மபுரி மாவட்டம் கொங்கரைப் பட்டியைச் சேர்ந்த கோபி, வாணியம்பாடி சேனப்பட் என்ற பகுதியைச் சேர்ந்த ஷாஜகான், வேலூர் மாவட்டம் முல்லை நகரைச் சேர்ந்த தசையன் என்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் மூவரும் தொடர்ந்து தாராபுரம் பகுதிகளில் பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து, தாராபுரம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி. செந்தில் குமார் அளித்த புகாரின் பேரில், மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கருப்பு தாள்கள், ரசாயனம் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் எத்தனை பேரை ஏமாற்றி பணம் பறித்தனர் என்பது குறித்தும், தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.