கோவை : மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சாதிய ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், சாதிய கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும் மேட்டுப்பாளையத்தில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சாதிய ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், சாதிய கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும் மேட்டுப்பாளையத்தில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தனது சொந்த சகோதரனையே வெட்டி ஆணவ படுகொலை செய்த நிகழ்வு அரங்கேறியது. மேலும், காதலித்த பெண்ணையும் அரிவாளால் வெட்டிய நிலையில், அவர் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாதிய ஆணவ படுகொலையை கண்டித்தும், தடுக்க தவறிய மத்திய, மாநில அரசைக் கண்டித்தும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட 13 அமைப்புகள் இணைந்து கூட்டமைப்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, சாதி மறுப்பு திருமணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கோரியும், ஆணவ கொலையினை தடுக்க தனிச்சட்டம் இயற்றவேண்டும் என கண்டன கோசங்கள் எழுப்பினர். மேலும், ஆணவ கொலைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டங்களை பயன்படுத்தி பிணையில் வெளியே வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மேட்டுப்பாளையம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தனது சொந்த சகோதரனையே வெட்டி ஆணவ படுகொலை செய்த நிகழ்வு அரங்கேறியது. மேலும், காதலித்த பெண்ணையும் அரிவாளால் வெட்டிய நிலையில், அவர் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாதிய ஆணவ படுகொலையை கண்டித்தும், தடுக்க தவறிய மத்திய, மாநில அரசைக் கண்டித்தும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட 13 அமைப்புகள் இணைந்து கூட்டமைப்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, சாதி மறுப்பு திருமணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கோரியும், ஆணவ கொலையினை தடுக்க தனிச்சட்டம் இயற்றவேண்டும் என கண்டன கோசங்கள் எழுப்பினர். மேலும், ஆணவ கொலைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டங்களை பயன்படுத்தி பிணையில் வெளியே வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மேட்டுப்பாளையம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.