கோவை : ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கமிஷன் பரிசீலிக்கும் என தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை : ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கமிஷன் பரிசீலிக்கும் என தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 27-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக நடைபெற்ற ஆணவ கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் கோவை வந்தார்.
அப்போது, கோவை பந்தய சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 2 பேரும் கைது செய்யப்படுவார்கள். முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 4,12,500 இன்று வழங்கப்பட உள்ளது. மேலும், அவர்களுக்கு வழங்க வேண்டிய மொத்த தொகையான ரூ. 8,25,000 இந்த வாரத்திலேயே கொடுக்கப்படும். அவர்களது கோரிக்கையான அரசு பணிக்கான ஆணை வழங்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்படியான அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கும். குற்றவாளிகள் மீது காவல்துறை மூலம் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் தேவைப்பட்டால் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் வழக்கில் இணைக்க வேண்டும். ஆணவ படுகொலைகள் தடுக்க சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்வோம். ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கமிஷன் பரிசீலிக்கும். மக்கள் தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளில் உத்தரபிரதேசத்தை விட கேரளாவில் அதிக அளவில் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் அதிகமாக உள்ளது, என தெரிவித்தார்.