கோவை : மூன்று மாதத்திற்குள் 2017-18 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் எனவும், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தற்போது 11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை : மூன்று மாதத்திற்குள் 2017-18 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் எனவும், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தற்போது 11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- எல்லா துறைகளுக்கும் முன் மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது. 2017-18-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்தவர்கள் தங்களுக்கு மடிக்கணிணி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மூன்று மாதத்திற்குள் 2017-18 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தற்போது 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி முதலில் வழங்கப்படும்.
புதிய பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போது மடிக்கணினி அவசியம் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மடிக்கணினி வழங்கப்படுகிறது. தற்போது, 12-வது படிக்கும் மாணவர்களுக்கு படித்து முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். பள்ளி கல்வி துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் வரும் 2-ம் தேதி சட்டபேரவையில் அறிவிக்கப்பட இருக்கிறது, எனக் கூறினார்.
மேலும், அ.ம.மு.க.வில் இருந்த தங்கதமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்து இருப்பது குறித்த கேள்விக்கு, இதற்கு மின்துறை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர்கள் பதில் சொல்லுவார்கள் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.‘
தொடர்ந்து, ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கை பற்றி அவர் பேசுகையில், "குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 2004-ம் ஆண்டிலேயே புதிய ஒய்வூதிய திட்டம் குறித்து தெளிவாக சொல்லப்பட்டு இருக்கின்றது. அரசு நிதி நெருக்கடி இருப்பதாலும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்படுகிறது. புதிய பென்சன் திட்டம் தொடர்ந்து செயல்படும் என்பதை சூசகமாக தெரிவித்தார்.