கோவை : மேட்டுப்பாளையம் வட்டத்தில் 16 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் ஐ. முருகன் நாளை காலை விசாரிக்கிறார்.
கோவை : மேட்டுப்பாளையம் வட்டத்தில் 16 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் ஐ. முருகன் நாளை காலை விசாரிக்கிறார்.
கோவை மாவட்டத்திற்கு வருகை புரியும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன், வன்கொடுமையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சார்ந்த சிறுமியையும், அவரது குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சந்திக்க உள்ளார். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் சுற்றுலா மாளிகை வளாகத்தில் கூட்டம் நடத்த உள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை அதே இடத்தில் சந்திக்க உள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு வருகை புரியும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன், வன்கொடுமையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சார்ந்த சிறுமியையும், அவரது குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சந்திக்க உள்ளார். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் சுற்றுலா மாளிகை வளாகத்தில் கூட்டம் நடத்த உள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை அதே இடத்தில் சந்திக்க உள்ளார்.