நீலகிரி : குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அமைக்கவிருந்த கோத்தகிரி அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீலகிரி : குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அமைக்கவிருந்த கோத்தகிரி அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெட்டட்டி, சேலவை, தும்பூர் ஆகிய ஊர்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன .இங்கு நீண்டகாலமாக ஆரம்ப சுகாதார நிலையும் உள்ளது. இதனை ஒட்டி பாறைகள் உள்ளன. அங்கு வேறு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இங்கு குடிநீர் வசதியோ, முறையான கழிவுநீர் வசதியோ இல்லை. எனவே, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், சுகாதார நிலையம் அமைத்தால் தங்கள் கோயில்களில் பண்டிகை மற்றும் சாவுகளில் காரியங்கள் செய்ய இடையூறாக இருக்கும் எனவும், மருத்துவ கழிவுகள் செல்ல சரியான கழிவுநீர் பாதை இல்லாததால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.

இதனிடையே, ஊர் தலைவர் சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு கலந்துகொண்டு மாற்று இடம் பற்றி பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், அரவேணு பகுதியில் உள்ள தனியார் இடத்தினை தனது சொந்த செலவில் பெற்றுத் தருவதாகக் கூறியதை அடுத்து போராட்டங்கள் நடத்த இருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெட்டட்டி, சேலவை, தும்பூர் ஆகிய ஊர்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன .இங்கு நீண்டகாலமாக ஆரம்ப சுகாதார நிலையும் உள்ளது. இதனை ஒட்டி பாறைகள் உள்ளன. அங்கு வேறு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இங்கு குடிநீர் வசதியோ, முறையான கழிவுநீர் வசதியோ இல்லை. எனவே, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், சுகாதார நிலையம் அமைத்தால் தங்கள் கோயில்களில் பண்டிகை மற்றும் சாவுகளில் காரியங்கள் செய்ய இடையூறாக இருக்கும் எனவும், மருத்துவ கழிவுகள் செல்ல சரியான கழிவுநீர் பாதை இல்லாததால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.

இதனிடையே, ஊர் தலைவர் சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு கலந்துகொண்டு மாற்று இடம் பற்றி பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், அரவேணு பகுதியில் உள்ள தனியார் இடத்தினை தனது சொந்த செலவில் பெற்றுத் தருவதாகக் கூறியதை அடுத்து போராட்டங்கள் நடத்த இருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.