கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை, அவதூறாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை, அவதூறாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தலைமை மருத்துவராக கஜேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் விபத்து பிரிவுக்கு மாற்றியதாக தெரிகிறது. அவசர சிகிச்சை பிரிவிற்கு இவரை விட ஜூனியரை பணியமர்த்தியதால், மீண்டும் தன்னை அவசர பிரிவிற்கு மாற்ற வேண்டும் என முதல்வர் அசோகனிடம் கஜேந்திரன் விண்ணப்பித்தார். அப்போது, முதல்வர் அசோகன் அதை நிராகரித்ததோடு, கஜேந்திரனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கஜேந்திரன் அனுமதி வாங்கி விடுப்பில் சென்றுள்ளார்.

ஆனால், இந்திய மருத்துவ ஆணையத்திற்கு இது தொடர்பாக முதல்வர் அசோகன் புகார் அளித்து, அவரை இடமாறுதல் செய்துள்ளார். மேலும் அவரது பணியிடத்திற்கு வேறு மருத்துவரை நியமித்துள்ளார். இதனால் கடந்த 8 மாதமாக பணியிடம் இன்றி மருத்துவர் கஜேந்திரன் இருந்துள்ளார். இந்நிலையில் தன்னை அவதூறாக பேசியதோடு, பலி வாங்கும் நோக்கில் செயல்பட்ட அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜேந்திரன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தலைமை மருத்துவராக கஜேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் விபத்து பிரிவுக்கு மாற்றியதாக தெரிகிறது. அவசர சிகிச்சை பிரிவிற்கு இவரை விட ஜூனியரை பணியமர்த்தியதால், மீண்டும் தன்னை அவசர பிரிவிற்கு மாற்ற வேண்டும் என முதல்வர் அசோகனிடம் கஜேந்திரன் விண்ணப்பித்தார். அப்போது, முதல்வர் அசோகன் அதை நிராகரித்ததோடு, கஜேந்திரனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கஜேந்திரன் அனுமதி வாங்கி விடுப்பில் சென்றுள்ளார்.

ஆனால், இந்திய மருத்துவ ஆணையத்திற்கு இது தொடர்பாக முதல்வர் அசோகன் புகார் அளித்து, அவரை இடமாறுதல் செய்துள்ளார். மேலும் அவரது பணியிடத்திற்கு வேறு மருத்துவரை நியமித்துள்ளார். இதனால் கடந்த 8 மாதமாக பணியிடம் இன்றி மருத்துவர் கஜேந்திரன் இருந்துள்ளார். இந்நிலையில் தன்னை அவதூறாக பேசியதோடு, பலி வாங்கும் நோக்கில் செயல்பட்ட அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜேந்திரன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
