திருப்பூர் அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு : போலீசார் விசாரணை

திருப்பூர் : பல்லடம் அருகே உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஐம்பொன் சிலையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : பல்லடம் அருகே உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஐம்பொன் சிலையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற நாராயணி பீடம் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், இக்கோவிலில் நாராயணி அம்மனின் சிலை ஐம்பொன்னால் வேண்டுதல் காரணமாக நன்கொடையாக கோயிலுக்கு வழங்கப்பட்டது. இந்த சிலையின் மதிப்பு இரண்டரை லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியை துளைத்துக்கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் சிலையை திருடி சென்றுள்ளனர்.

இதையடுத்து, இக்கோவிலின் பூசாரி செந்தில் முருகன் பல்லடம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, போலீசார் கோவில் பூசாரி உட்பட அப்பகுதியில் உள்ள பல்வேறு நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...