திருப்பூர் : திருப்பூரில் பொது விநியோகக் கடையில் முறைகேடு நடப்பதாக வதந்திகளைப் பரப்பி வரும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் பொது விநியோகக் கடையில் முறைகேடு நடப்பதாக வதந்திகளைப் பரப்பி வரும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியின் 30-வது வார்டு பகுதியில் உள்ள பொது விநியோக கடை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தி வருவதாக தெரிகிறது. இதனிடையே, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர், அக்கடையில் முறைகேடு நடைபெறுவதாகவும், பொதுமக்களிடம் அவதூறு பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்போது, பொது விநியோகக் கடையில் முறைகேடு நடப்பதாக வதந்திகளைப் பரப்பும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி 15 ஆண்டுகளாக பொதுவிநியோகக் கடையை நடத்தி வரும் கஸ்தூரி பாய் மகளிர் சுய உதவிக் குழுவினரை மீண்டும் கடையை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
திருப்பூர் மாநகராட்சியின் 30-வது வார்டு பகுதியில் உள்ள பொது விநியோக கடை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தி வருவதாக தெரிகிறது. இதனிடையே, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர், அக்கடையில் முறைகேடு நடைபெறுவதாகவும், பொதுமக்களிடம் அவதூறு பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்போது, பொது விநியோகக் கடையில் முறைகேடு நடப்பதாக வதந்திகளைப் பரப்பும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி 15 ஆண்டுகளாக பொதுவிநியோகக் கடையை நடத்தி வரும் கஸ்தூரி பாய் மகளிர் சுய உதவிக் குழுவினரை மீண்டும் கடையை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.