சரவணம்பட்டி அருகே 3 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : 3 தனிப்படை அமைத்து குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு

கோவை : தாயின் தகாத உறவுக் காதலனால் அடித்து கொல்லப்பட்டு சரவணம்பட்டி அருகே உள்ள முட்புதரில் 3 வயது சிறுமியின் உடல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படை அமைத்துள்ளனர்.

கோவை : தாயின் தகாத உறவுக் காதலனால் அடித்து கொல்லப்பட்டு சரவணம்பட்டி அருகே உள்ள முட்புதரில் 3 வயது சிறுமியின் உடல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படை அமைத்துள்ளனர். 

கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் ரூபினி தம்பதிகளின் மகள் தேவிஸ்ரீ (3). இந்த சிறுமி இன்று காலை சரவணம்பட்டி கரட்டுமேடு அருகே உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். மேலும், சிறுமியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்தன. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் தாயாருக்கு தமிழ்ச்செல்வன் என்பவருடன் தகாத உறவு இருந்து வந்தது தெரிய வந்தது. மேலும், நேற்று சிறுமியின் தாயாரும், தகாத உறவுக் காதலனுமான தமிழ்ச்செல்வனும் குழந்தையை வெளியே அழைத்து சென்ற நிலையில், அவர் சிறுமியை தனியே அழைத்துச் சென்று அடித்து கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, சிறுமியின் தாயாரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் தகாத உறவுக் காதலன் தமிழ்ச்செல்வனை கைது செய்ய தீவிரம் காட்டியுள்ளனர். 

மேலும், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை குழுவினர்கள் ஆய்வாளர் காந்தி, உதவி ஆய்வாளர்கள் பாரதிராஜா, அய்யாசாமி ஆகியோர் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...