கோவை : சரவணம்பட்டி அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் சுமார் 3 வயது சிறுமியின் பிரேதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சரவணம்பட்டி அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் சுமார் 3 வயது சிறுமியின் பிரேதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகள் ஸ்ரீதேவி (3). இந்த சிறுமி இன்று சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு அருகே உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும், சிறுமியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.