கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கோவை மாவட்ட போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. போலீசார், பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதேபோல, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் வீடுகளில் ரகசியமாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் விரைவாக விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முடிவில் இறங்கினர். அதன்படி, இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், குற்றவாளிகள் குறித்த விரிவான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கோவை மாவட்ட போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. போலீசார், பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதேபோல, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் வீடுகளில் ரகசியமாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் விரைவாக விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முடிவில் இறங்கினர். அதன்படி, இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், குற்றவாளிகள் குறித்த விரிவான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.