தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், திருப்பூர் தொகுதியில், அ.தி.மு.க., சி.பி.ஐ..(தி.மு.க. கூட்டணி) மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்பட சுயேட்சைகளும் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், திருப்பூர் தொகுதியில், அ.தி.மு.க., சி.பி.ஐ..(தி.மு.க. கூட்டணி) மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்பட சுயேட்சைகளும் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது.
23-வது சுற்று நிலவரப்படி, தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டுள்ள சி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் சுப்பராயன் 4,96,190 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, அ.தி.மு.க. 4,06,555 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம், தற்போது வரை 64,235 வாக்குகளை அதிகமாக சி.பி.ஐ. பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் 62,115 வாக்குகளும், அ.ம.மு.க. 42,861 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 40,859 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவிற்கு 21,328 வாக்குகள் கிடைத்துள்ளது.