பொள்ளாச்சி : தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்பட சுயேட்சைகளும் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது.
பொள்ளாச்சி : தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்பட சுயேட்சைகளும் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி, தி.மு.க. வேட்பாளர் சண்முகநாதன், அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனை விட 3,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.