கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும், பணியாளர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும், பணியாளர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி தலைமையில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை மாநகராட்சி அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உறுதிமொழி விபரம் வருமாறு :- அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம்.” என்ற உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமியின் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் (கணக்கு) சரவணன், (நிர்வாகம்) மோகனசுந்தரி, (நிர்வாக அலுவலர்) மாணிக்கம், சட்ட அலுவலர் அமுல்ராஜ், குடிநீர் கணக்கு பிரிவு அலுவலர் லட்சுமிபிரபா, மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.