அரசு கேபிள் டி.வி வாடிக்கையாளர்கள் இணையதள மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தர கோரிக்கை

கோவை : அரசு கேபிள் டி.வி நிறுவன வாடிக்கையாளர்கள் இணையதள மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை : அரசு கேபிள் டி.வி நிறுவன வாடிக்கையாளர்கள் இணையதள மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்தின் மூலமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான பொதுமக்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் மூலமாக தான் விரும்பும் சேனல்களுக்கு அந்தந்த பகுதி முகவர் மூலமாக தொகை செலுத்தி சேனல்களை தேர்வு செய்து பார்த்து வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாம் தேர்ந்தெடுக்கும் சேனல்களுக்கான தொகையை முகவர்களிடம் செலுத்தி, தான் பார்க்கும் சேனல்களை தேர்வு செய்து பார்த்து வருகிறார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேனல்களை முகவர்களின் வங்கிக் கணக்கு மூலமாகவே புதுப்பிக்க முடியும் நிலை உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர், சேனல்களை பார்க்க இயலாதவர்கள், அதன் காலக்கெடுவிற்கு பின்னர் சேனல்களை பார்க்க இயலாத வகையில் துண்டிப்பு செய்யப்படுகிறது.

தற்போது, தமிழகம் முழுவதும் டிஜிட்டல் இந்தியா என்ற வகையில் இணையதளம் மூலமான மின்கட்டணம், பேருந்து கட்டணம், தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கான கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான சேவைகளுக்கான கட்டணங்கள் செல்போன் மூலமாகவும், இணையதளம் மூலமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், அரசு கேபிள் வாடிக்கையாளர்களும் மாதாந்திர சேவைக்கான கட்டணத்தை தங்களது வங்கி கணக்கில் இருந்து இணையதள மூலமாக கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...