கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி : தந்தை, மகன் கைது

கோவை : கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் தந்தை, மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை : கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் தந்தை, மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை வரதராஜபுரம், நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் உதயராஜ் (41). இவரும் இவரது தந்தை ஞானப்பிரகாசம் (67) இணைந்து அப்பகுதியில் யு.சி.வி. சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் ஏலச்சீட்டு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இணைந்து மாதம் தோறும் ரூ. 5,000 முதல் ரூ. 50,000 வரை செலுத்தி வந்தனர். இந்த நிலையில், ஏலச்சீட்டு முடிந்து கமிஷன் போக, மீதமுள்ள முதிர்வுத் தொகையை தராமல் ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை சுமார் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக அருள்மொழிவர்மன் என்பவர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். 

அதன்பேரில் உதவி ஆணையர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார், உதயராஜ் மற்றும் அவரது தந்தை ஞானப்பிரகாஷ் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். 

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...