கோடை சீசனுக்காக அழகிய வண்ணச் செடிகளுடன் தயாரான காட்டேரி பூங்கா : சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

நீலகிரி : கோடை சீசனுக்காக அழகிய வண்ணச் செடிகளுடன் காட்டேரி பூங்கா தயாராக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரி : கோடை சீசனுக்காக அழகிய வண்ணச் செடிகளுடன் காட்டேரி பூங்கா தயாராக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. 'சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள், தேயிலை எஸ்டேட்டுகள், ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷன், நீர்வீழ்ச்சி' என அனைத்தும் ஒருங்கே அமைந்து இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளதால், இந்த பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.



நீலகிரியில் இங்கு மே மாதம் நடக்கும் கோடை சீசனுக்காக பிப்ரவரி மாத இறுதியில், பல்வேறு மலர் நாற்றுக்களின் நடவுப்பணிகள் நடைபெற்றன. அதில், ஆல்டர் நேந்திரா, குளோரோ பைட்டா, ஆஜகாஸ் ஆகிய செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வந்தது. அதுமட்டுமின்றி, டொரண்டா, ஒரிஷின் ஆகிய செடி வகைகளும் நடவு செய்யப்பட்டு, தற்போது இவைகள் மலர்ந்து கண்ணை கவரும் வகையில் இருக்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...