உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் 3 நாள் தூய்மைப் பணிக்கு திட்டம்

கோவை : தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை : தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தென் கயிலாய பக்தி பேரவை என்பது வெள்ளியங்கிரி மலைக்கு வருகை தரும் பக்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை ஆகும். இந்த பேரவை வெள்ளியங்கிரி மலையின் புனித தன்மையை உணர்ந்து, அதை தூய்மையாக வைத்து கொள்வதன் அவசியம் குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மலை பாதைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேராமல் பராமரித்து வருகிறது. இதற்காக இந்த தென் கயிலாய பக்தி பேரவை, கடந்த 9 ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் மே 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள உள்ளது. இதில், ஈஷா தன்னார்வலர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இந்த புனிதமான தூய்மை பணியில் நீங்களும் கரம்கோர்க்க விரும்பினால் 8300083111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...