கோவை : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி என்ற நோயாளி கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி என்ற நோயாளி கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மற்றும் மனைவி சீதா. இவர்கள் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கோவில் திருவிழாவிற்கு தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, கோவிந்தசாமிக்கு திடீரென உடல்நிலை மோசமானதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இவர் ஆண்கள் பிரிவில் ஆஸ்துமா தொந்தரவுக்காக கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று நீண்ட நேரம் படுக்கையில் கோவிந்தசாமியை காணவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த கோவிந்தசாமியின் மனைவி மற்றும் அருகில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் அவரை தேடினர். மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்தும் கோவிந்தசாமி கிடைக்கவில்லை. பின்னர் அங்குள்ள கழிவறையில் சென்று பார்த்தபோது அவர் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததைக் கண்டு அங்குள்ள நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.