போளூவாம்பட்டி பகுதியில் வீடுகளை சூறையாடிய யானை கூட்டம் மக்கள் அலறியடித்து ஓட்டம்

கோவையை அடுத்த போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. தனியாகவும், கூட்டமாகவும் அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் வாழை, சோளம், தக்காளி தோட்டங்களுக்குள் புகுந்து விடுகின்றன. 

நேற்று முன்தினம் மாலை, வனத்தில் இருந்து வெளியேறிய ஒன்பது யானைகள் கொண்ட கூட்டம், முள்ளங்காடு வழியாக சிறுவாணி சாலையை கடந்து, முட்டத்து வயல் பகுதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த தண்ணீர் தொட்டியை உடைத்து தள்ளியது. பின்னர், குளத்தேரி பகுதியை நோக்கி சென்ற யானை கூட்டம், அங்கிருந்த இரண்டு வீடுகளை இடித்து தள்ளியது. 

அப்போது, வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள், காயமின்றி தப்பினர். அக்கம் பக்கத்தினர் சத்தம் எழுப்பி, யானை கூட்டத்தை விரட்டியடிக்க முயற்சி செய்தனர். வனத்துறையினரும் அங்கு விரைந்தனர். சுமார் நான்கு மணி நேரம் போராடி, யானை கூட்டத்தை தாணிகண்டி என்ற வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...