சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த  ஐந்து பேர் பலி.




பொள்ளாச்சி கோட்டாம்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் நடராஜ் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார்.  இவரது மகன் திருமுகருகன் மகள் ஜெயலட்சுமி மருமகன் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் குடும்பத்துடன் கடந்த 26 ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்றிரவு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். காரை ஆனந்த கிருஷ்ணன் ஓட்டி வந்துள்ளார்.

இன்று அதிகாலை பொள்ளாச்சி உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி எதிர்பாராத விதமாக விபத்து ஏற்ப்பட்டது. விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆனந்த கிருஷ்ணன் நடராஜ் இருவருவரும் உயிரிழந்தனர். திருமுருகன் ஜெயலட்சுமி  ஸ்ரீநிதி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமணையில் சிகிச்சைபாலனிற்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பிரியா, சிறுவன் தர்ஷன், சிறுமி சாகித்யா உள்ளிட்ட மூன்று பேர் கோவை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டி வந்த ஆனந்த கிருஷணன் தூக்கத்தில் இருந்தபடி, காரை ஓட்டியதால்  இந்த கோர விபத்து ஏற்ப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம்குறித்து கோமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரே குடும்பத்தைசேர்ந்த ஐந்து பேர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...