திருப்பூரில் பெண் காவலர் விஷம் அருந்தி தற்கொலை : போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் பெண் காவலர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்:  திருப்பூரில் பெண் காவலர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகள் பர்வின் பாவி. இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக போலீசில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பணியாற்றி வந்தார். இவர் நல்லூர் அடுத்த திருநகர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மதியம் 2.30 மணிக்கு பணியை முடித்துக் கொண்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து பெண் காவலர் பர்வின் பாவி மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பெண் போலீஸ் பர்வீன் பாவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...