கோவை : கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர், மதுரை, கரூர், திருச்சி, நீலகிரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கோவை : கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர், மதுரை, கரூர், திருச்சி, நீலகிரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கோடை காலம் துவங்கியதையடுத்து பள்ளி விடுமுறைகளைக் கொண்டாட பெற்றோர்கள், அவர்களது குழந்தைகளை தங்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்வது வழக்கம். அதே போல், இந்த மாதம் கோயில் திருவிழாக்களும் அதிகம் உள்ளது. இதனால், கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 60 கோடை கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த மாதம் முழுவதும் இயக்கப்படும். அதேபோல், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,” என்றார்.
கோடை காலம் துவங்கியதையடுத்து பள்ளி விடுமுறைகளைக் கொண்டாட பெற்றோர்கள், அவர்களது குழந்தைகளை தங்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்வது வழக்கம். அதே போல், இந்த மாதம் கோயில் திருவிழாக்களும் அதிகம் உள்ளது. இதனால், கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 60 கோடை கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த மாதம் முழுவதும் இயக்கப்படும். அதேபோல், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,” என்றார்.