வரும் மே 4-ம் தேதி முதல் சனி, ஞாயிறுகளில் ஆதியோகியில் கண்ணை கவரும் 3டி ஒளி, ஒலி காட்சி

கோவை : கோவையில் உள்ள 112 அடி ஆதியோகியில் கண்ணை கவரும் 3டி ஒளி, ஒலி காட்சி வரும் மே 4-ம் தேதி முதல் சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் நடைபெற உள்ளது.

கோவை : கோவையில் உள்ள 112 அடி ஆதியோகியில் கண்ணை கவரும் 3டி ஒளி, ஒலி காட்சி வரும் மே 4-ம் தேதி முதல் சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் நடைபெற உள்ளது.



ஆதியோகி சிவனுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, கோவை ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடியில் ஆதியோகியை சத்குரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ஆதியோகியை தரிசிப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், ஆதியோகியின் வாழ்க்கையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ”ஆதியோகி திவ்ய தரிசனம்” என்னும் 3டி ஒளி, ஒலி காட்சியை கடந்த மஹாசிவராத்திரி அன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். 



இதையடுத்து, வரும் மே 4-ம் தேதி முதல் வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகள், அமாவாசை, பெளர்ணமி தினங்கள் மற்றும் விஷேச நாட்களில் ஆதியோகி 3டி ஒளி, ஒலி காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தொடங்கி சுமார் 15 நிமிடங்கள் நடைபெறும். ஆதியோகி திவ்ய தரிசனத்தை பார்வையிடுவதற்கு எவ்வித முன்பதிவும் தேவையில்லை. கட்டணமும் இல்லை. அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் வருகை தரும் பக்தர்களுக்கு இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...