நீலகிரி : உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், 'ஆடம்ஸ்' நீரூற்று பொலிவுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி : உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், 'ஆடம்ஸ்' நீரூற்று பொலிவுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட 'ஆடம்ஸ்' செயற்கை நீரூற்று உள்ளது. உதகையின் பாரம்பரிய மிக்க சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தப் பகுதி, சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். இரவு நேரங்களில், இங்கு நிற்கும் சுற்றுலாப் பயணிகள், விளக்குடன் கூடிய நீரூற்று ஒளியில், 'போட்டோ' எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தற்போது, சீசன் நெருங்கி வருவதால் இந்த 'ஆடம்ஸ்' நீரூற்றை பொலிவுப்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த மூன்று நாட்களாக சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட 'ஆடம்ஸ்' செயற்கை நீரூற்று உள்ளது. உதகையின் பாரம்பரிய மிக்க சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தப் பகுதி, சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். இரவு நேரங்களில், இங்கு நிற்கும் சுற்றுலாப் பயணிகள், விளக்குடன் கூடிய நீரூற்று ஒளியில், 'போட்டோ' எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தற்போது, சீசன் நெருங்கி வருவதால் இந்த 'ஆடம்ஸ்' நீரூற்றை பொலிவுப்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த மூன்று நாட்களாக சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது.