கோவை : கோவை மத்திய ரயில்நிலையத்தில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய சோலார் தகடுகள் பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்துள்ளது.
கோவை : கோவை மத்திய ரயில்நிலையத்தில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய சோலார் தகடுகள் பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்துள்ளது.

கோவை மத்திய ரயில்நிலையமானது தமிழகத்தின் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாகும். தினந்தோறும் ரயில் நிலையத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய 2100 யூனிட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, இந்த மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய சோலார் சக்தி மூலம் மின்சக்திப் பெற ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, அதிக மின் உற்பத்திக்காக நடைமேடை எண் 1 மற்றும் 2 -ன் மேல் பகுதியில் உள்ள கூரையில் 100 kW சோலார் தகடுகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இனிமேல், இதன் மூலம் தினமும் 450 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரயில் நிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " தற்போது 100 kW சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இம்மாதம் 50 KW சோலார் தகடுகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் 675 யூனிட் மின்சாரம் கிடைக்கும். எதிர்வரும் காலத்தின் 2100 யூனிட் மின்சாரம் கிடைக்கும் வகையில் சோலார் தகடுகள் பொருத்தப்படும்," என்றார்.

மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய சோலார் தகடுகள் பொருத்தப்படுவதால் ரயில் நிலையத்தின் மின்சார செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மத்திய ரயில்நிலையமானது தமிழகத்தின் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாகும். தினந்தோறும் ரயில் நிலையத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய 2100 யூனிட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, இந்த மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய சோலார் சக்தி மூலம் மின்சக்திப் பெற ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, அதிக மின் உற்பத்திக்காக நடைமேடை எண் 1 மற்றும் 2 -ன் மேல் பகுதியில் உள்ள கூரையில் 100 kW சோலார் தகடுகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இனிமேல், இதன் மூலம் தினமும் 450 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரயில் நிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " தற்போது 100 kW சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இம்மாதம் 50 KW சோலார் தகடுகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் 675 யூனிட் மின்சாரம் கிடைக்கும். எதிர்வரும் காலத்தின் 2100 யூனிட் மின்சாரம் கிடைக்கும் வகையில் சோலார் தகடுகள் பொருத்தப்படும்," என்றார்.

மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய சோலார் தகடுகள் பொருத்தப்படுவதால் ரயில் நிலையத்தின் மின்சார செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.