விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய இருவர் கிணற்றில் விழுந்து பலி : இருநாட்களுக்குப் பிறகு சடலங்கள் மீட்பு

திருப்பூர் : பல்லடம் அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய போது விவசாய கிணற்றில் விழுந்த 2 பேரின் சடலங்களை இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : பல்லடம் அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய போது விவசாய கிணற்றில் விழுந்த 2 பேரின் சடலங்களை இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த ஞாயிறன்று இரவு சுமார் 11 மணியளவில் சொகுசு கார் ஒன்று கோவையிலிருந்து மதுரை நோக்கிச் சென்றுள்ளது. பல்லடம் அருகே ஜி.டி.என். தனியார் தொழிற்சாலையை சொகுசு கார் கடந்த போது, எதிரில் வந்த அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும், காரிலிருந்த இரண்டு வாலிபர்கள் அரசுப் பேருந்தின் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பயணிகளுடன் சென்ற பேருந்தை ஓட்டிச் சென்று பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சென்றார்.



இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரிடம், சொகுசு காரிலிருந்த இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து தப்பி காட்டுக்குள் ஓட்டம் பிடித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் இரண்டு ஆண்களின் உடல்கள் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையின் உதவியுடன் விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த இரண்டு உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், மதுரை பரவையைச் சேர்ந்த ராஜேஷ்வரன் (38), சமயநல்லூரைச் சேர்ந்த சரவணக்குமார் (37) ஆகிய இருவரும் கடந்த ஞாயிறன்று விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய போது, விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...